நானும் அழகிதான்...

கிழிந்த ஆடையென்றாலும்
தைத்து தான் போட்டிருக்கிறேன்

கண்மை வாங்க காசில்லாவிட்டாலும்
அடுப்புக்கரியால் கண் கருப்பாகத்தான் தெறிகிறது

வெள்ளையாய்த் தெறியாவிட்டாலும்
மஞ்சள் முகத்தில் கலந்து தான் உள்ளது

Kumki soi soi Tamil Song - கும்கி பாடல்கள் சொய் சொய்...

எனக்கு பிடித்த பாடல் - எனக்கு பிடித்த பாடல் வரிகள்

படம் : கும்கி (2012)
பாடியவர் : மகிழினி மணிமாறன்
வரிகள் : யுகபாரதி
இசை : D.இமான்

சொய் சொய்... சொய் சொய்....
கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய்... சொய் சொய்...

வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக்கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய்... சொய் சொய்...

கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே உடலை சரி செய்யலாம்...



உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் .

கட்டை விரல்.
*************

உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.

ஆள்காட்டி விரல்.
*****************

உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

என்னைக் கவர்ந்த பாடல் - ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்...




ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

தங்க மேனி தழுவும்
பட்டுச்சேலை நழுவும்

தென்றல் வந்து விளக்கும்
அது உங்களோடு பழக்கம்

வலையோசை 2018









வைரமுத்து ஏஆர்.ரகுமான் மணிரத்னம் கூட்டணியில்...

மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா வைரமுத்து ஏஆர்.ரகுமான், மணிரத்னம் என மூன்று முத்துக்களை இணைத்து முதன்முதலில் அழகு பார்த்தது. அதன்பிறகு 26 ஆண்டுகளாய் பல முத்தான பாடல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இப்போது இவர்களின் கூட்டணியில் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் வெளியாக உள்ளது.

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் உடம்பு குண்டாகி விடுமா?

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் உடம்பு குண்டாகி விடும் என்ற ஒரு நம்பிக்கை பெண்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இதில் சுத்தமாக உண்மை இல்லை என்பது டாக்டர்களின் கருத்து.

உடல் குண்டாகும் என்பதைத் தவிர மார்பகம் பெருத்து விடும், இடுப்பளவு அதிகரித்து விடும் என்ற நம்பிக்கையும் பெண்களிடம் உள்ளது. இருப்பினும் இதெல்லாம் வெறும் மாயை என்பது டாக்டர்களின் கருத்து.
மன ரீதியான மாற்றத்திற்கும், உடல் ரீதியான மாற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செக்ஸ் வைத்துக் கொள்வதற்கும், உடல் பெருக்கத்திற்கும் நேரடித் தொடர்பு எதுவும் கிடையாது. மேலும் தினசரி அல்லது அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் மார்பகம் பெருக்கும் என்பதற்கோ, இடுப்பளவு அதிகரிக்கும் என்பதற்கோ ஆதாரம் எதுவும் இல்லை.
மேலும் ஆணின் விந்தனு, பெண்ணின் ரத்தத்துடன் கலக்கும் என்பதும் கூட ஒரு மாயைதான். அதிலும் உண்மை இல்லை.

ஒரு பெண், ஆணை வெறுக்கக் காமசூத்திரம் கூறும் காரணங்கள்

ஒரு பெண்ணை ஆண், மனதார விரும்பி வரும் போது அவனை அவள் புறக்கணிக்கிறாள் என்றால் அதற்கு ஒவ்வொருவரும் வேறு காரணத்தை நாமாகத் தீர்மானித்துக் கொள்வோம். ஆனால் காமசூத்திரம் இதற்கு சுமார் 20 காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறது. அவை என்ன தெரியுமா?

இயற்கைப் பல்பொடி தயாரிப்பது எப்படி?

How to prepare a natural tooth powder

அருகம்புல், மா இலை, கொய்யா இலை, நாயுருவி செடி, கரிசலாங்கண்ணி, பூவரசு இலை, வல்லாரை முதலிய இலைகளுள் கிடைப்பவற்றை சேகரித்து உலரவைத்து தூள் செய்து கொள்ளவும்.

நாட்டுக்கோழிக் குழம்பு - ஆந்திரா ஸ்டைல்

தேவையான பொருட்கள்:

நாட்டுக்கோழி - 1 கிலோ
வெங்காயம் - 3,
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்,
தக்காளி - 2
தயிர் -2 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3-4 ,
மல்லி (தனியா)- 1 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்,
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்,
பூண்டு - 3 பல்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது,
தண்ணீர் - 1 கப்

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

எனக்கு பிடித்த பாடல் - கொடியிலே மல்லிகைப்பூ


கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்

உதடுகளை பராமரிக்க சில குறிப்புகள்

 
மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல தான் உதடுகளும். இவை அன்பை முத்தமாக வெளிப்படுத்துகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ்.

ஓட்ஸ் மசாலா கிரேவி

என்னென்ன தேவை?
சுரைக்காய்-அரை கிலோ, ஓட்ஸ்-1 டீஞஸ்பூன், காய்ந்த மிளகாய் வற்றல் - 3, சோம்பு (பொடித்தது) -2 டீஸ்பூன் பெருங்காயப் பொடி - 1சிட்டிகை, இஞ்சிப்பொடி - அரை டீஸ்பூன்,எண்ணெய் -5 டீஸ்பூன், கெட்டித் தயிர் (நன்கு அடித்தது) - கரம் மசாலா - 1டீஸ்பூன், பிரரியாணி இலை - 2, லவங்கப்பட்டை (பொடித்தது) - 1 துண்டு, தண்ணீர் -1 கப்.
எப்படிச் செய்வது?

டோஃபு-காய்கறி கேழ்வரகு சேவை


என்னென்ன தேவை?
ரெமிடக்ஸ் கேழ்வரகு சேவை-1பாக்கெட், நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய வெங்காயம்-கால் கப், பச்சைமிளகாய்-3, நறுக்கிய முளைக்கீரை- கால் கப், மெலிதாக, நீளவாக்கில் நறுக்கிய கேரட், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், குடமிளகாய் - தலா கால் கப், நறுக்கிய கொத்தமல்லி-1 டேபிள்ஸ்பூன், எண்ணெய்-வதக்குவதற்கு உப்பு- ருசிக்கேற்ப, டோஃபு (சோயா பனீர்) - 50 கிராம், எலுமிச்சை பழம் - 1

மாம்பழ பர்பி

தேவையானவை: மாம்பழச் சாறு - 1 கப், பால் பவுடர்  -  1/2 கப், சர்க்கரை      - 2 கப், நெய்        - 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப் பூ - 1 கப், ஏலக்காய்த் தூள் - 1 ஸ்பூன்

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு மாம்பழக் கூழைப் போட்டுக் கிளற வேண்டும். கூழ் கெட்டியானதும் இறக்கிவைத்து அதில் தேங்காய்த் துருவல், சர்க்கரை, பால் பவுடர் எல்லாம் சேர்த்துக் கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்றாகக் கிளற வேண்டும்.

மீதியுள்ள நெய்யை விட வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் பொங்கி வரும்போது ஏலக்காய்த் தூளைப் போட்டு ஏற்கனவே நெய் தடவிய தட்டில் கொட்ட வேண்டும். லேசாக ஆறியதும் துண்டுகள் போட வேண்டும்.

கோடை காலத்தில் எதை உண்ணலாம்?

கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் காத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறும் தண்ணீர் இந்த பணியைச் செய்து விட முடியாது. அதற்கு உதவியாக முதலில் வருவது காய்கறிகள்.

காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது மிகவும் சிறந்தது. அதிகமாய் வேகவைத்தோ, பொரித்தோ உண்பதில் எந்த விதமான பயன்களும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

பழங்கள் உண்பது கோடைக்காலத்துக்கு மிகவும் அவசியமானது. நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதுடன், உடலின் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகிறது.

சமையல் குறிப்பு

கேரட்டை மொத்தமாக வாங்கி  வந்து விட்டு, சீக்கிரம் காய்ந்து போய் விட்டதே என்று கவலைப்பட  வேண்டாம். கேரட்டின் தோலை சீவி, அதன் நுனி மற்றும் அடி பாகத்தை வெட்டிவிடுங்கள். இதனை ஒரு பிளாஸ்டிக் டாப்பபாவில் போட்டு டைட்டாக மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால், வாரக்கணக்கில் கேரட்டுகள் ஃப்ரெஷ்ஷஇருக்கும் . 

                                                                                                          பி.பாமா, சென்னை- 59

சக்கரையால் (வெள்ளை சீனி) உடல்நலக்கேடு

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகு...ம். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

வல்லாரையும் அதன் பயன்களும்


வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. கஷாயம், காசம், மேகம், போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை கீரை நிகரற்றது. இந்த கீரையை  பால் கலந்து அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட விழுதை நெல்லிக்காய் அளவு திரட்டி உண்ண வேண்டும். இப்படி இந்த விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.

நண்டு குழம்பு


தேவையான பொருட்கள் :
நண்டு - அரை கிலோ
சிறிய வெங்காயம்  - 100 கிராம்
தக்காளி  - 1
பூண்டு - 10 பல்
புளி - சிறிதளவு
வரமிளகாய்  - 25
மிளகு - 1 ஸ்பூன்
தேங்காய் - அரை முடி
மஞ்சள்தூள்  - சிறிதளவு
கசகசா - கால் ஸ்பூன்
எண்ணெய் - 5 ஸ்பூன்
உப்பு, கருவேப்பிலை - தேவையான அளவு
வெந்தயம், சோம்பு, சீரகம் - சிறிதளவு

கார்லிக் க்ரேவி

தேவையானவை :
கார்லிக் சாஸ் 4 டே.ஸ்பூன்
மிளகாய் வற்றல் 8
வெந்தயம் ¼ டீஸ்பூன்
துவரம் பருப்பு 1 டீஸ்பூன்
தக்காளிப்பழம் 2
கறிவேப்பிலை சிறிது
தூள் உப்பு தேவையானது
சின்ன வெங்காயம் 50 கிராம்
கடலைப்பருப்பு 2 டே.ஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
மல்லி(தானியா) 2 டே.ஸ்பூன்
மிளகு 6
அஜினமோட்டா 5 சிட்டிகை
புதுப்புளி எலும்மிச்சையளவு
ஜீரகம் 1/2 டீஸ்பூன்
வெ.உ.பருப்பு 1/2 டீஸ்பூன்
தேங்காய்ப் பூ 3 டே.ஸ்பூன்
கடுகு சிறிது
நல்லெண்ணெய் 100 மில்லி
முதலில்
1. ஒரு தம்ளர் வெந்நீரில் புளியைக் கரைத்து. 1 டீஸ்பூன் உப்பு கலந்து வைக்கவும்.
2. வாணலியில் 2 டே.ஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, பெருங்காயம், ஜீரகம், மல்லி, மிளகாய், கடைசியாக நறுக்கிய தக்காளிப்பழம் ஆகியவற்றைப் போட்டு வதக்கிக் கொண்டு தேங்காய்ப் பூ சேர்த்து, நைஸாக அரைத்து வைக்கவும்.
இப்படிச் செய்யவும்
1. கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பாதி எண்ணெய ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, வெள்ளை உளுத்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுப் பொரித்துக் கொண்ட, சின்ன வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
2. மீதியுள்ள எண்ணெயை ஊற்றி அரைத்த மசாலா, கார்லிக் சாஸ், அஜினமோட்டோ ஆகியவற்றைச் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் உப்பு சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கவும். 10 நிமிடம் கழித்துப் பறிமாறவும்.

அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசிய கிச்சன் டிப்ஸ்

கைகளில் ஏற்படும் வாடையை போக்க
வெங்காயம் நறுக்கிய பிறகும், பூண்டு உரித்த பிறகும் கைகளில் ஏற்படும் வாடையை போக்க கைகளை stainless steel ஸ்பூன்களில் தேயுங்கள்.
பிரியாணி அடிப்பிடித்து விட்டால்...
பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும்.

பச்சைப்பயிறு கொத்துக்கறி செய்வது எப்படி?

 
பச்சைப்பயிறு - 200 கிராம்
தேங்காய் - 1
காய்ந்த மிளகாய் - 10
மல்லி - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி

பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கு காரணங்கள்

 கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.

கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. ஏனெனில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதால், அவை வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். வேண்டுமெனில், மாத்திரைகளுக்கு பதிலாக வேறு கருத்தடைப் பொருட்களை பயன்படுத்தினால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை தவிர்க்கலாம்.

உடல் எடையைக் குறைப்பது எப்படி?

அதிக உடல் எடை தான் இன்று பலரையும் படுத்தி எடுக்கும் விஷயமாக இருக்கிறது.  எப்படித்தான் உடல் எடையைக் குறைப்பது என்று திணறித் தவித்துப் போகிறார்கள்.

அவர்களுக்கு உதவும், எளிய முறையில் உடல் பருமனைக் குறைக்கும் வழிகள் இவை...

* அன்றாடம் எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

* தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* உடல் பருமனை அதிரடியாகக் குறைக்கிறேன் பேர்வழி என்று கொலைப் பட்டினி கிடைக்கக்கூடாது.

இயற்கைப் பல்பொடி

அருகம்புல், மா இலை, கொய்யா இலை, நாயுருவி செடி, கரிசலாங்கண்ணி, பூவரசு இலை, வல்லாரை முதலிய இலைகளுள் கிடைப்பவற்றை சேகரித்து உலரவைத்து தூள் செய்து கொள்ளவும். 
 இதில் அரை கிலோ எடையளவு எடுத்து அதில் இரண்டு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து காய வைக்கவும். இதனுடன் உலர்ந்த துளசி இலை 250 கிராம், வாயுவிளங்கம் 100கிராம், மாசிக்காய் 100கிராம், தான்றிக்காய் 100கிராம், கடுகாய்த்தோல் 100கிராம், மகிழம்பட்டை 100கிராம், சுக்கு 100கிராம், கருவேலம்பட்டை 250கிராம், கருங்காலி 250 கிராம், ஆலம்விழுது 250கிராம், மாதுளை தோல் 250 கிராம், கிராம்பு 50 கிராம், இந்துப்பு 100 கிராம் முதலியவற்றை சேர்த்து மிஷினில் அரைத்துக் கொள்ளவும். இதுதான் இயற்கை பல்பொடி.

மர செக்கு எண்ணையின் மகத்துவம்

மர செக்கில் எண்ணெய் ஆட்டுவதில் அனுபவம் வாய்ந்த மதுரை, சமயநல்லூர், செந்தில்குமார் பதில் சொல்கிறார்.
''அந்தக் காலத்தில், மரத்தின் மூலம் செய்யப்பட்ட செக்கில், மாடுகள் மூலம்தான் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்... போன்றவற்றை ஆட்டினார்கள். காலப்போக்கில் கால்நடைகள் குறைந்து போனதாலும், மர செக்கின் மகத்துவம் தெரியாமல் போனதாலும், இந்தத் தொழில் நலிவடைந்து விட்டது. இந்த செக்குகளின் இடத்தை இயந்திரங்கள் (ரோட்டரி) பிடித்துவிட்டன. ஆனால், நாங்கள் பழையபடியே மர செக் மூலமாகவே தற்போதும் எண்ணெய் ஆட்டி வருகிறோம். மாட்டுக்குப் பதிலாக, மோட்டார் பொருத்தியிருக்கிறோம் அவ்வளவுதான். இப்படி மர செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும்.

இறைவழி மருத்துவம்

இறைவழி மருத்துவம் என்பது மருந்து இல்லாத மருத்துவம். மருத்துவ உதவி தேவைப்படாத மருத்துவம். மருத்துவத்தை இரண்டு கூறாகப் பிரிக்கலாம். இயற்கை மருத்துவம், செயற்கை மருத்துவம். இயற்கையிலே உற்பத்தி ஆகக்கூடிய தானிய வகைகள், தாவர வகைகள், கீரை வகைகள், மர வகைகள் இன்னும் பூமியிலே காணப்படுகின்ற கல், மண் முதற்கொண்டு அனைத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. செயற்கை மருத்துவத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட, ரசாயனப் பொருட்களிலிருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவையெல்லாம் தேவைதானா? உண்மையிலேயே இவைதான் நோய்களைக் குணப்படுத்துகின்றனவா? அல்லது இவற்றைச் சாப்பிட்டால் நோய் குணமாகும் என்று நம்புகிறாமோ, அந்த நம்பிக்கையால் நோய்கள் குணமாகின்றனவா? நாம் சிந்தித்துத் தெளிவடைய வேண்டியவர்களாக இருக்கிறோம்.
நாம் முதலாவதாக, நோய் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். டயாபடீஸ் என்று சொல்கிறோம். கேன்சர் என்று சொல்கிறோம். இதைத்தான் நோய் என்று சொல்கிறோம். உண்மையில் டயாபடீஸ் என்பது நோயா? அல்லது அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகமாகத் தாகம் எடுப்பது, அதிகமாகப் பசி எடுப்பது, உடல் மெலிந்துபோவது அல்லது உடல் குண்டாவது, அரிப்பு ஏற்படுவது இவற்றைத்தானே நோய் என்று சொல்ல முடியும். அதாவது, உடலில் ஏற்படும் கஷ்டங்களைத்தானே நோய் என்று சொல்ல முடியும். அதற்கு டயாபடீஸ் என்று பெயரிட்டது யார்? கேன்சர் என்று ஒரு வார்த்தையைச் சொல்கிறோம். ஆனால், உண்மையில் வயிற்றில் ஒரு புண் ஏற்படுகிறது அல்லது மூளையில் உள்ள தசையில் சிதைவுகள் ஏற்பட்டு தசையில் ஆங்கங்கே கொப்புளங்கள் ஏற்படுகின்றன. இதைத்தான் நாம் நோய் என்று சொல்ல முடியும்.

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்


  1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
  2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
  3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
  4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

ரீஃபைண்ட் ஆயில்! – மெல்லக்கொல்லும் நஞ்சு!

ரீஃபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?

ஆலையிலிருந்து பெறப்பட்ட எண்ணெயில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக், அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள். பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.
 
திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால், “சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய்” என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

மீன் பக்கோடா

மீன் பக்கோடா
தேவையான பொருட்கள்
சுறாமீன்-1/2 கிலோ, கடலைமாவு-150 கிராம், அரிசிமாவு-100 கிராம், சோளமாவு-50 கிராம், மைதா மாவு-50 கிராம், சோம்பு-1 ஸ்பூன், பட்டை-3, வெங்காயம்-3, பூண்டு-1, இஞ்சி-2 அங்குலம், எண்ணெய்-1/4 கிலோ, மஞ்சள் பொடி-1/2 ஸ்பூன், பச்சை மிளகாய்-6, மிளகாய் பொடி-1 ஸ்பூன், உப்பு-தேவையான அளவு.


மீனைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.
இதனோடு வெங்காயத்தை நீளவாட்டில் அரிந்து சேர்க்கவும். இஞ்சி பூண்டு தோல் நீக்கித் தட்டிச் சேர்க்கவும். எல்லா மாவுகையும் ஒன்றாகக் கலந்து சேர்க்கவும். சோம்பு, பட்டை இடித்துச் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். பச்சை மிளகாய் நறுக்கிச் சேர்க்கவும். மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து உப்பு சேர்த்து நீர் தெளித்து பிசறவும்.
எண்ணெய் புகைய காயவிட்டு தீயைக் குறைத்து கை நிறைய மாவை அள்ளிப் பிசறிவிட்டு பொன்னிறமாக மொரமொரப்பாக பொரித்துத் தூவவும்.
சுடசுட தக்காளி ரைஸோடு பரிமாறவும்.

டோஃபு - காய்கறி கேழ்வரகு சேவை


என்னென்ன தேவை?
ரெமிடக்ஸ் கேழ்வரகு சேவை-1பாக்கெட், நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய வெங்காயம்-கால் கப், பச்சைமிளகாய்-3, நறுக்கிய முளைக்கீரை- கால் கப், மெலிதாக, நீளவாக்கில் நறுக்கிய கேரட், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், குடமிளகாய் - தலா கால் கப், நறுக்கிய கொத்தமல்லி-1 டேபிள்ஸ்பூன், எண்ணெய்-வதக்குவதற்கு உப்பு- ருசிக்கேற்ப, டோஃபு (சோயா பனீர்) - 50 கிராம், எலுமிச்சை பழம் - 1

ஸ்டஃப்டு குடமிளகாய்


என்னென்ன தேவை?

குடமிளகாய்-3, பிரெட்-1 ஸ்லைஸ், நறுக்கிய வெங்காயம்-கால் கப், கேரட் - கால் கப், பட்டாணி - கால் கப், உரித்த மக்காளச் சோளம் - கால் கப், காலிஃபிளவர் - கால் கப், நறுக்கிய முளைக்கீரை -அரை கப், இஞ்சி - மிளகாய் விழுது - 1 டீஸ்பூன், உப்பு -ருசிக்கேற்ப, நறுக்கிய கொத்தமல்லி - கால் கப், எலுமிச்சம் பழம் -1, மஞ்சள் தூ்ள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - சிறிது.

கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். 

கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக தொடர்ந்து 120 நாட்கள் சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

இளமையோடு நீண்ட நாட்கள் வாழ

இளமையோடு நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று விரும்பும் உங்களுக்காக,  மூப்பைத் தள்ளிப் போட முத்தான குறிப்புகள் இதோ…

1.   ‘ஆன்ட்டி ஏஜிங்’ என்றாலே, ‘ஆன்டி ஆக்ஸிடன்ட்’தான் நினைவுக்கு வர  வேண்டும்.   வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி மற்றும் இ, துத்தநாகம்,  செலினியம் இவை  அனைத்தையுமே, ஆன்டி ஆக்ஸிடன்ட் என்கிறது நவீன அறிவியல்.  இந்தச் சத்துக்கள்  நிரம்பிய காய்கள், பழங்கள், தானியங்களை எடுத்துக்  கொள்ளும்போது, உங்கள்  முதுமையை இன்னும் கொஞ்சம் தள்ளிப் போடலாம்.
 2.   நெல்லிக்காயில்தான், வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு   நெல்லிக்காய், தேனில் ஊற வைத்த சிறு துண்டு இஞ்சியை, எடுத்துக்  கொள்ளுங்கள்.

எண்ணெய் தேய்த்து குளி

எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஒரு அற்புதமான வாழ்வியல் மருத்துவ முறையைப் பற்றியதுதான் இந்த கட்டுரை.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உங்கள் வீட்டில் இல்லையா?, அப்படியானால் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியும். அந்த அளவுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு ஆரோக்கிய செயல்முறை.

எண்ணெய் தேய்த்து குளிப்பது என்றால் என்ன?

“இது எங்களுக்கு தெரியாதாக்கும்…… எண்ணெயை தேய்க்கனும் அப்புறம் குளிச்சிரனும்… அவ்வளவுதான்… இதென்ன பெரிய விடயமா? இதுக்கு ஒரு கட்டுரையா…. ?” … என முடித்துவிடும் விடயமல்ல இது. பல கோடி ரூபாய் செலவு செய்து பதினைந்து வருடம் ஆராய்ச்சி நடத்தலாம், அவ்வளவு விடயங்கள் உள்ளன.

சமையல் குறிப்பு


கேரட்டை மொத்தமாக வாங்கி  வந்து விட்டு, சீக்கிரம் காய்ந்து போய் விட்டதே என்று கவலைப்பட  வேண்டாம். கேரட்டின் தோலை சீவி, அதன் நுனி மற்றும் அடி பாகத்தை வெட்டிவிடுங்கள். இதனை ஒரு பிளாஸ்டிக் டாப்பாவில் போட்டு டைட்டாக மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால், வாரக்கணக்கில் கேரட்டுகள் ஃப்ரெஷ்ஷ இருக்கும் .

                                                                                      

ஆரோக்கிய கழிப்பறை

காலை எழுந்தவுடனும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்னும், நாம் பயன்படுத்துவது கழிப்பறை. இதைப் பற்றி பேசுவதற்குப் பலரும் முகம் சுளிக்கலாம். ஆனால், கழிப்பறைகளில்தான் நம் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது. 
“இயல்பாகக் கிடைத்த நல்ல விஷயங்களையும் நாகரிகத்தின் பெயரால் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் கழிப்பறைகளும் அடக்கம்” என்கிறார் லாவண்ய சோபனா திருநாவுக்கரசு. இவர் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் இரா. திருநாவுக்கரசின் மனைவி. 

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் ‘பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்’ குறித்து முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டுவருகிறார். கழிப்பறை ஆரோக்கியம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டது: 

மிளகின் மகத்துவம்



பண்டைய காலத்தில் வெளிநாட்டு வர்த்தகர்கள் இந்தியா வந்து மிளகுகளை வாங்கிச் சென்றார்கள். அவர்கள் அதை பெருஞ்செல்வம் போல் மதித்தார்கள். 15ம் நூற்றாண்டிற்கு பின்பே தென்அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு மிளகாய் அறிமுகம் ஆனது. அதற்கு முன்பு உணவில் காரம் சேர்ப்பது என்றால் மிளகு தான்.

ஆரேக்கிய சூப்

எனனெனன தேவை?
சிறியதாக நறுக்கிய காய்கறிக்ள்... வெங்காயம் - 1, உரித்த பூண்டு -2 பல், கேரட் -2, பீன்ஸ் -1பிடி, முட்டை கோஸ் -4 தழை, குடமிளகாய் -1, வெங்காயத்தாள் -சிறிது, துண்டு, தக்காளி -2, கொத்தமல்லி - சிறிது. தோல் உரித்து அரைத்த பாதாம் -5, உப்பு தேவைக்கேற்ப, மிளகுப்பொடி -சிறிது, பால் - அரை கப். வெண்ணெய்- கோலி அளவு, சர்க்கரை - 2 சிட்டிக்கை.

எப்படிச் செய்வது?
நறுக்கிய காய்கள் பாதாம் விழுது முதலியவற்றை உப்பு, மிளகுப்பொடி, சர்க்கைரை, தேவையான நீர் விட்டு குக்கரில் 2 விசில் வரை வேக விட வேண்டும். பிறகு ஆறியதும் வடிகட்டி, வெந்தவற்றை மிக்சியில் அரைக்க வேண்டும். பரிமாறும் முன் வடிகட்டிய நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து சிறிய பால் கலந்து சூடாக சூப் கிண்ணத்தில் விட்டு, அதன்மேல் சிறிது வெண்ணெயை மிதக்கவிட்டு கொடு்க்கலாம். விருப்பப்பட்டால் வறுத்த ரொட்டித்துண்டுகளை மேலே தூவலாம்.

என்ன சிறப்பு?
நார்ச்சத்துள்ள ஹெல்த்தி சூப் இது.
உடல்நலமில்லாதவர்கள் இதை ஆகாராமாகவே எடுத்துக்கொள்ளலாம்.
 -ஆர்.உஷா,சென்னை- 28.


சமையலில் செய்யக்கூடாத சில காரியங்கள்....!


* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.